நில பிரச்னையில் மோதல் 6 பேர் மீது போலீஸ் வழக்கு

புதுச்சேரி,  அக். 12:  ெரட்டியார்பாைளயம் அருேக நில பிரச்ைனயில் கோஷ்டி மோதலில்  ஈடுபட்டதாக இருதரப்பைச் சேர்ந்த 6 ேபர் மீது ேபாலீசார் வழக்குபதிவு  ெசய்துள்ளனர். புதுவை, உருளையன்பேட்டை அண்ணா நகரில் வசிப்பவர்  செல்வராஜ். இவரது மகன் தியாகராஜ் (28), நகை பத்தர். இவர்களுக்கு சொந்தமான  இடம் கோடீஸ்சுவாமி நகரில் உள்ளதாம். அந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த  சக்கரவர்த்தி தரப்பு உரிமை கோரியதால் இருதரப்புக்கு பிரச்னை நீடித்ததாக  கூறப்படுகிறது. சம்பவத்தன்று தியாகராஜ் பூட்டிச் சென்ற அந்த  வீட்டிற்குள், தியாகராஜன் தரப்பு உள்ளே சென்றதாக தெரிகிறது. இதை அவர்கள்  தட்டிக் கேட்கவே இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக  மாறியது. இதில் தியாகராஜ் தாய் ராஜாமணி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

  இதுகுறித்து இருதரப்பினரும் ரெட்டியார்பாளையம் போலீசில் நேற்று முன்தினம்  புகார் அளித்தனர். தியாகராஜ் புகாரின்பேரில் பால் வியாபாரிகளான  சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர் செந்தில் ஆகியோர் மீது  போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் சக்கரவர்த்தி அளித்த புகாரின் மீது  தியாகராஜ், செல்வராஜ் மற்றும் தினேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: