கூடுதல் போனஸ் கேட்டு 15ல் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.7:  திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி) மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தாராபுரம் ரோட்டில் உள்ள ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் பேசினார். கூட்டத்தில், சங்க மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, ஆறுமுகம், சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் கேட்டு ஜின்னிங், டையிங், பிரிண்டிங், கலாஸ், மளிகைக் கடை, ஜவுளிக்கடை, தியேட்டர், ரைஸ் மில் உள்ளிட்ட அனைத்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு கோரிக்கை கடிதம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் கேட்டு வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை அருகில் திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆர்ப்பாட்டத்தில் திருப்பூரில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: