சென்னை: தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜி.ேக.மணி கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவைக்கு வெளியில் பாமக தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. இந்த ஆட்சிக்கு ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆகவே சட்டமன்ற பேரவையில் பாமக ஒரு பொறுப்புள்ள கட்சியாக செயல்படும். ஆட்சி பொறுப்பேற்று முதல் நாளில் 5 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அது வரவேற்கக்கூடிய அறிவிப்பாக பார்க்கிறோம். காவல்துறையில் தலையீடு இருக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.