மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனால் நுரையீரல் மற்றும் இதயம் என்பன பாதிப்படையும் என்பது அனைவரும் அறிந்ததே. தூசுத்துணிக்கைகள் வளியுடன் சேர்ந்து உடலினுள் செல்வதால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுதல், சுவாப் பாதைகளில் எரிவுகள் ஏற்படுதல், ஆஸ்துமா, சிறுநீரகப் பிரச்னை என்பன ஏற்படுவதுடன் சில சமயங்களில் புற்றுநோயையும் ஏற்படுத்தும். அதேவேளை இது உடல் எடை அதிகரிப்பிற்கும் வழிகோலும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பாக மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.