திண்டிவனம்: தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது, மத்திய அரசு திட்டங்களை எதிர்க்கிறது என்று அதிமுகவை கடுமையாக தாக்கி திண்டிவனத்தில் தமிழிசை பேட்டி அளித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. கெயில் ஹைஹட்ரோ கார்பன் திட்டங்களை அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது ைஹட்ரோ கார்பன் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வந்தது. நீட்தேர்வை தமிழக மாணவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் இந்த நீட்டை வைத்து அரசியல் கட்சியினர் தமிழகத்தில் அரசியல் செய்து வருகின்றனர்.