நாகர்கோவிலில் 500 மீ. தானாக ஓடி தடம் புரண்ட ரயில் இன்ஜின்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 500 மீ தூரம் தானாக ஓடி ரயில் இன்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலைய யார்டு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த இன்ஜின் ஒன்று திடீரென்று நகர தொடங்கியது. சுமார் 500 மீட்டர் தூரம் நகர்ந்த நிலையில் ரயில் இன்ஜின் கட்டுப்பாடின்றி பலத்த சப்தத்துடன் தடம்புரண்டது. அதனை மீட்கும் பணிகள் உடனே பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் சரக்கு ரயில்கள் நிறுத்திவிடப்படும் பகுதி என்பதாலும், பயணிகள் ரயில் நிறுத்தப்படுவது இல்லை என்பதுடன், விபத்து நடந்த பகுதியில் வேறு ரயில்கள் ஏதும் இல்லாததால்  விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: