டிடிவியின் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை: அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களை  மாற்றினால் அதிமுக, அமமுக இணைப்புக்கு தயார் என்று டி.டி.வி.தினகரன் கூறுவது வாய்ஜாலம். ஏமாற்றுவேலை. இணைப்புக்கு அவரை யாரும் அழைக்கவில்லை. முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டி.டி.வி.தினகரன் அமலாக்கத்துறை பிடியில் இருந்து விடுபடவில்லை. தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு. அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும் என்றார்.‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வாக்காளருக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்துள்ளதாக தங்கதமிழ்செல்வன் கூறி உள்ளாரே’ என்று கேட்டதற்கு, ‘பணம் கொடுத்ததாக அவர் நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்து விலக தயார். நிரூபிக்க தவறினால் அவர் விலக தயாரா?’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: