முதல்வர் மீது சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு தமிழ்நாட்டிலே எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது.
ஒரு உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளது. இடைத்தேர்தல் தேதியைக் கூட அறிவிக்க தைரியமில்லாத ஆளும் கட்சி இங்கு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரித்து 3 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மதிப்பளித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.எடியூரப்பா தன்னிடம் புதிய குண்டு இருப்பதாக கூறுகிறார். அவரிடம் வீசுவதற்கு எந்த குண்டும் கிடையாது. பொய்யான தகவல்களை மட்டும் வீசி மக்களை திசைதிருப்பி வருகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி