வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மணியன், வேல்முருகன், சத்தியராஜ், கோடிலிங்கம் உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் அதிகாலை கோடியக்கரை அருகே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேக பைபர்படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, 600 கிலோ வலை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து கொண்டு, விரட்டி அடித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம், இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

The post வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: