மதுரை : மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார், ராமநாதபுர மாவட்டத்தில் 75% தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டம் உள்பட 6 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக மதுரையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.