வீடுகளுக்கே நேரடியாக சென்று முதியோர் உதவித்தொகை வழங்க புதிய திட்டம் துவக்கம் : மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு

வருசநாடு: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வீடு, வீடாக சென்று பணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடமலைமயிலை  ஒன்றியத்தில் மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருசநாடு, முருக்கோடை,  மேல்பூசனூத்து, உப்புத்துரை உள்ளிட்ட கிராமங்களில் மதுரை மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி சார்பில் அரசின் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று முதல் முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு வீடு,  வீடாக சென்று பணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி கிளை செயலாளர் ராமனாதன் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவின் போது ராஜா, மூர்த்தி, அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். முதியோர் பணம் வாங்க வயதானவர்கள் வங்கிக்கு அலைந்து வந்த நிலையில் தற்போது வீடு, வீடாக பணம் வழங்கும் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: