விவசாயிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்

 

காரைக்குடி, ஆக. 7: காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில். மாவட்ட வேளாண் வளர்ச்சி ெதாடர்பாக, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகள் குறித்து விளக்கினார். இதையடுத்து ஓ.சிறுவயல் உமேஷ்கண்ணன், கருங்குளம் முருகேசன், இயற்கை விவசாயி ஆபிரகாம், சிங்கம்புணரி கார்த்திகேயன் தாஸ் உள்ளிட்ட விவசாய தொழில் சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோர் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். பின்னர் ஆடுவளர்ப்பு தொடர்பான கையேட்டை கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டார்.

The post விவசாயிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: