விமானப் பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி சென்னையில் இருந்து அதிக விமானங்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருந்தது. இதன்காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த வாரத்தில் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் 196 விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னை சர்வதேச விமான சேவைகளை பொறுத்தவரை, ஒன்றிய அரசு வழக்கமான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. அதனால் சிறப்பு விமானங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வருகை, புறப்பாடு கடந்த மாதத்தில் 20 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது அது 54 சிறப்பு விமானங்களாக அதிகரித்துள்ளன….

The post விமானப் பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி சென்னையில் இருந்து அதிக விமானங்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: