வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி, நவ. 17: மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் பாலசிங்(42). இவரது நண்பர் பட்டுராஜ். நேற்று முன்தினம் மது அருந்தும்போது இவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பட்டுராஜ், அவரது நண்பர்கள் இருவரோடு சேர்ந்து குறிஞ்சிநகர் டாஸ்மாக் கடை அருகே இருந்த பாலசிங்கை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலசிங் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: