இந்தியா வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை Jul 25, 2021 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மாலோத் கவிதா தெலுங்கானா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தின மலர் தெலுங்கானா: வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலுங்கானா எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி மாலோத் கவிதாவின் உதவியாளருக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சோ்ந்தவா் மாலோத் கவிதா. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தெலங்கானா மாநிலம் மெஹபூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தோ்தலின்போது மாலோத் கவிதாவுக்கு வாக்களிக்குமாறு பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் டிஆா்எஸ் கட்சித் தொண்டா் ஒருவா் பொதுமக்களுக்குப் பணம் அளித்தார். அவரை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, வாக்களிக்க பணம் அளிக்கப்பட்டது தொடா்பாக மாலோத் கவிதா மற்றும் அந்தத் தொண்டா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா். தோ்தலில் மாலோத் கவிதா வெற்றி பெற்றதையடுத்து அந்த வழக்கு ஹைதராபாதில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. … The post வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை appeared first on Dinakaran.
தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஐஜி தலைமையில் தனிப்படை விசாரணை: ஒரு வாரத்தில் முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை பலாத்காரம் செய்தார்: பாஜ எம்.எல்.ஏ முனிரத்னா மீது மேலும் ஒரு பெண் புகார்
லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்; திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்: ஏழுமலையானை தரிசிப்பதை தடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை