ரெட்டியார்சத்திரம் தாதாங்கோட்டையில் புவி வெப்பமயமாதல் தீமை குறித்து விளக்கம்

ரெட்டியார்சத்திரம், ஏப். 4: ரெட்டியார்சத்திரம் அருகே தாதாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பருவநிலை மாற்றமும், மரம் நடுதலும் என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் அகிலேஷ், பாலசூர்யா, தினேஷ், ஜெயக்குமார், சபியுல்லாஹ், சாம், சிவகுரு, விகாஷ் ஆகியோர் புவி வெப்பமயமாதலின் தீங்கு குறித்தும், அதனை தவிர்க்க மரம் நடுதலே இன்றிமையாத தீர்வு என்றும் மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் அவர்களுக்கு புரியும் வகையில் வண்ண படங்கள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

The post ரெட்டியார்சத்திரம் தாதாங்கோட்டையில் புவி வெப்பமயமாதல் தீமை குறித்து விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: