மைனர் பெண் தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு அசோகபுரம் ராஜா வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் நிருபாமா(17). இவருக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு இருந்து வந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் வலியால் நிருபாமா துடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டில் நிருபாமா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் நிருபாமாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு நிருபாமா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மைனர் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: