காஞ்சிபுரம், ஜன.9: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரல் மேலாளர், தரவு உதவியாளர், பல்நோக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நிரல் மேலாளர் 1, தரவு உதவியாளர் 1, பல்நோக்கு பணியாளர் 2 ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவமானது https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 18.1.2024ம் தேதி மாலை 5.45 மணிக்குள், 42A, ரயில்வே ரோடு, நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மேலாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.