மேட்டூருக்கு நீர்வரத்து 64,595 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 59,954 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது.  நீர்மட்டம் 112.04 அடியிலிருந்து 114.63 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 8516 டி.எம்.சியாக உள்ளது.இதேபோல், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் 80,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 66,000 கனஅடியாக சரிந்தது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை கண்ணுக்கு தெரியாத வகையில் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து நேற்றஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடித்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: