ரயிலில் படியில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் : ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வலியுறுத்தல்

சென்னை : மாற்றுப் பாதையில் ரயிலை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் விபத்து குறித்து ஆய்வு செய்த பின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பேட்டி அளித்துள்ளார். மேலும் ரயிலில் படியில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மும்பையில் உள்ளது போன்று பக்கவாட்டு சுவரின் அளவை குறிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ரயில் விபத்து குறித்து வரும் 30ம் தேதி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் மக்கள் கருத்து கூறலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: