சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சேலம், தருமபுரி, நாமக்கல், நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இன்று கனமழை பெய்யும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் தெற்கு, தென்மேற்கு, தெற்கு, அந்தமான் கடல் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் செப்.5ம் தேதி வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, 03.09.2021 முதல் 06.09.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சேலம் பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், நாராயண நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது….
The post மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..! appeared first on Dinakaran.