மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்குவது தொடர்பாக வயது வரம்பு தளர்த்தல் தேர்வுக் கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் நடந்தது.இதில் பெறப்பட்ட 54 மனுக்களில் 43 பேர் கலந்து கொண்டனர். 11 பேர் வயது தளர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த 43 பேருக்கு தேர்வுக் குழுவினரால் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 42 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம்உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories: