தர்மபுரி, ஜூன் 10: தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து, பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கந்தசாமி, கிரைஸாமேரி மற்றும் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
