×

மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி, அக்.5: பர்கூர் அடுத்த ஏ.நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(43), கூலி தொழிலாளியான இவரது மகன்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொண்ட மணிகண்டன், கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஏ.நாகமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று போலீசார் விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தது மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன்கள் இருவரும் ஒரே நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்து, அளவுக்கு அதிகமாக மதுகுடித்த மணிகண்டன், அவ்வழியாக நடந்து சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Manikandan ,A. Nagamangalam ,Parkur ,Parkur Government Hospital ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது