மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

நன்றி குங்குமம் தோழி ‘களகாத்த சந்தனமரம்….’ என்ற பாடல் கேரளாவில் சமீபத்தில் சமூகவலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்விராஜ், பிஜூ மோகன்; நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இந்தப் படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. வாழ்க்கை; தத்துவத்தை இயல்பாக சொல்லும் ‘களகாத்த சந்தனமரம்…’ பாடலை யுடியூப்பில் மட்டும் 40 லட்சம் பேர் விரும்பி கேட்டுள்ளனர். 1.5 லட்சத்திற்கும்; அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இந்த பாடலை இயற்றி சொந்தக் குரலில் பாடியிருப்பவர் கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் தமிழ்; மூதாட்டி நஞ்சம்மா. திரையுலகுக்கு புதுமுகமான இவரிடம்; உங்களுடன் படத்தில் நடித்தவர்கள் யார்? என்ன படத்தில் பாடி நடித்துள்ளீர்கள் என்று; கேட்டால் ‘‘அதெல்லாம் எனக்கு தெரியாது. கிராமிய பாடல்களை பாடுவது மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் யார் எங்கு பாட கூப்பிட்டாலும்; கால, நேரம் பார்க்காமல் அவர்களுடன் கிளம்பிவிடுவேன்’’ என்கிறார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் நஞ்சம்மாவிற்கு திடீர் என படத்தில் பாட கிடைத்த வாய்ப்பு பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.; திரைத் துறையில் புகழ் வெளிச்சம் பெறப் போராடிய காலம் மாறி இன்று எத்தனை வயதானாலும், குறைகளை மறந்து தடைகளை உடைத்து சாதிக்க; முடியும் என்பதற்கு இவரே உதாரணம். மலைவாழ் இனத்தை சேர்ந்த இவர்; அந்த படத்திலும் மலைவாழ் பெண்ணாகவே நடித்து அசத்தியுள்ளார்.;; மலையாள திரையுலகமும், ஊடகங்களும் அவரை பாராட்டி வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் நஞ்சம்மாவுக்கு சிறந்த கிராமிய; பாடலுக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

The post மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி appeared first on Dinakaran.

Related Stories: