மயிலாடும்பாறை அருகே கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

வருசநாடு, மே 9: மயிலாடும்பாறை அருகே கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடும்பாறை அருகே ஓட்டணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில வருடங்களாக கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நீதிமன்றம் வாயிலாக உத்தரவிட்டும் பல கோரிக்கைகள் பொதுமக்கள் விடுத்து இருந்தன. ஆனால் இதுவரையும் கருவேல் மரங்கள் கண்மாயில் அகற்றப்படாமல் உள்ளதால் மிகவும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ‘‘கருவேல் மரங்கள் எங்கள் பகுதியில் குறிப்பாக சிறுகுளம் கண்மாய் மற்றும் செங்குளம் கண்மாய் பகுதியில் அதிக அளவில் அகற்றப்படாமல் உள்ளன. எனவே விரைந்து அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றினால் தான் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அதிக அளவிலான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே உடனே அகற்ற வேண்டும். மேலும் கண்மாயின் ஆக்கிரமிப்பை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும்’’என்றார்.

The post மயிலாடும்பாறை அருகே கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: