மயிலாடும்பாறையில் கொசு தொல்லை: நாணல்களை அகற்ற கோரிக்கை

வருசநாடு, மே 15: மயிலாடும்பாறை கிராம ஊராட்சி ஓடை பகுதிகளில் நாணல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுக்கான் ஓடை பகுதியில் உள்ள ஓடைகளில் நாணல் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை பதம் பார்த்து வருகின்றன.

இதனால் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகையால் ஓடை பகுதிகளில் வளர்ந்துள்ள நாணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடமலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கொசு அதிகளவில் உற்பத்தியாகியுள்ளது. கொசு மருந்து அடித்து ஓடைகளில் வளர்ந்துள்ள நாணல்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மயிலாடும்பாறை கிராமத்தில் சின்ன குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் மலேரியா காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மயிலாடும்பாறையில் கொசு தொல்லை: நாணல்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: