மத்தூர் அரசு ஆண்கள் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

போச்சம்பள்ளி, செப்.29: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், முக்காகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் மீனாசக்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சக்திசாந்தகுமார், ராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, பொறுப்பாளர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் குண.வசந்தரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் சின்னதுரை, சின்னராஜ், ஆசிரியர்கள் முருகன், சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜானிபாஷா வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

The post மத்தூர் அரசு ஆண்கள் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: