டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வடக்கு மின்வாரிய அலுவலகத்தில், இளை நிலை பொறியாளராக இருப்பவர் மாணிக்கம். இவர் உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார். அதில், உத்தனப்பள்ளி அடுத்த கோடகரஅள்ளி பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்த ₹20ஆயிரம் மதிப்பிலான 20கிலோ கொண்ட காப்பர் ஒயரை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த திருட்டு கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள் நடைபெற்றிருக்க வேண்டும். காப்பர் ஒயரை திருடிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: