மகளின் காதலுக்கு எதிர்ப்பு; வாலிபரை துண்டு துண்டாக வெட்டி உடலை புதைத்த கொடூரம்: காதலியின் தந்தை வெறிச்செயல்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம், பெங்கரகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சைலஜா. இவரும், இதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் தனசேகர் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். இது சைலஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி காதல் தொடர்ந்தது. இதனால் ஆத்திரத்தில், கடந்த 22ம் தேதி இரவு சைலஜாவின் தந்தை பாபு, தனசேகருக்கு போன் செய்து ‘‘உன்னிடம் தனியாக பேச வேண்டும். என்னுடைய விவசாய நிலம் அருகே வா’’ என்று அழைத்துள்ளார். உடனே அவரும் சென்றார். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள், ‘தனசேகர் வேறு எங்காவது சென்றிருக்கலாம்’ என நினைத்து மறுநாள் முழுவதும் காத்திருந்தனர். ஆனால் வரவில்லை. இதனால் 24ம் தேதி காலை பலமனேர் காவல் நிலையத்தில் தனசேகரின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் சைலஜாவின் தந்தை பாபு, தனது சொந்த விவசாய நிலத்தில் கொடூரமாக தனசேகரை கொலை செய்து, பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாபுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தனசேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்….

The post மகளின் காதலுக்கு எதிர்ப்பு; வாலிபரை துண்டு துண்டாக வெட்டி உடலை புதைத்த கொடூரம்: காதலியின் தந்தை வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: