போடி அருகே மக்களுடன் முதல்வர் முகாம்

போடி, ஜூலை 24: போடி அருகே சிலைமலை பெருமாள் கோயிலில், சிலமலை மற்றும் மணியம்பட்டி கிராம ஊராட்சிக்கான மக்கள் முதல்வர் முகாம் நடந்தது. இதில் சிலமலை, மணியம்பட்டி, ராசிங்காபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வீடு, நிலம் உள்ளிட்டவைகளுக்கு பட்டா மற்றும் பெயர் மாற்றம் குறித்து 300க்கும் கோரிக்கை மனுக்களும், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக 400க்கும் மேற்பட்ட மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த முகாமினை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தேனி டி.ஆர்.ஓ ஜெயபாரதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post போடி அருகே மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: