பெரம்பலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகளுக்கு நாளை நேரடி கலந்தாய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசுக் கல்லூரியில் நாளை முதலாமாண்டு அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நேரடிக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் அருகேயுள்ள கும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இடம் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நாளை 7ம் தேதி அனை த்து தகுதியான விண்ணப் பதாரர்களுக்கும் நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வில் இ ணையவழியில் விண்ணப் பித்தவர்கள் மற்றும் கல் லூரியில் நேரடியாக விண் ணப்பித்தவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகளுக்கு நாளை நேரடி கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: