இந்தியா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி!: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் சட்டப்பேரவை அலுவலகம்..!! May 10, 2021 புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி கொரோனா புதுச்சேரி மாநிலம் சட்டமியற்றல் அலுவலகம் சட்டம் சுத்தம் அலுவலகம் தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. புதுச்சேரி மாநில முதலமைச்சராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் உள்ள ரங்கசாமியின் அலுவலகம் மற்றும் செயலாளர் அலுவலகம் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் இன்று ஒருநாள் மூடப்படுவதாகவும், அலுவலக ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸானது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வரும் நிலையில் புதுச்சேரி முதலைச்சரையும் அந்த கிருமி விட்டுவைக்கவில்லை என்பது நினைவில் கூறத்தக்கது. … The post புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி!: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் சட்டப்பேரவை அலுவலகம்..!! appeared first on Dinakaran.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் எடியூரப்பாவிற்கு முன்ஜாமீன் : சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது என நிபந்தனை!!
நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்
பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார் : ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கடும் தாக்கு
குவைத் கட்டட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் கொச்சி வந்தது!!
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்களுடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது தனி விமானம்..!!
குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம் : கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் வேதனை!!