புதிய ரேஷன் கடை திறப்பு

போச்சம்பள்ளி, மார்ச் 9: காவேரிப்பட்டணம் ஒன்றியம், தட்ரஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி கிராமத்தில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் மணிமேகலை நாகராஜ் கலந்து கொண்டு, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தட்ரஅள்ளி ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வடிவேலன், வார்டு உறுப்பினர் பரமாத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் வங்கி தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ராமகிருஷ்ணன், மணி, ரமேஷ் பழனிசாமி, மகேந்திரன், செல்வம், அன்பு, தாமோதிரன், பழனி, வேடியப்பன், முனியப்பன், சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அனுமந்தன் நன்றி கூறினார்.

The post புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: