பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில்

டெல்லி: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் முறைகேடு வழக்கில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேரை சிபிஐ கைது செய்தது. நீட் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில் appeared first on Dinakaran.

Related Stories: