பாஜ இளைஞரணி சைக்கிள் பேரணி

சென்னை: பாஜ மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தையொட்டி பாஜ இளைஞரணி சார்பாக, வரும் 15ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 75 இளைஞர்கள், தேசிய கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் கோஷம் முழங்க, 75 கிலோமீட்டர் தொலைவு செல்லும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. சென்னை உத்தண்டியில் இருந்து மகாபலிபுரம் வரை இந்த சைக்கிள் பேரணி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கலந்து கொள்கிறார்கள். அதேபோல ஆகஸ்ட் 16ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், ஆகஸ்ட் 17ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நடைபெறுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post பாஜ இளைஞரணி சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: