பள்ளி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு கூட்டம்

 

தர்மபுரி: அரூர் கல்வி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் 2025-26ம் ஆண்டிற்கான பள்ளி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு கூட்டம், அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சின்னமாது தலைமையில் நடந்தது. மொரப்பூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் கணேசன் மற்றும் ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கடந்த 3 கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 100 நாள் சாதனை திட்டத்தில் சாதித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேசிய வருவாய் வழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக, மாநில இணை இயக்குனர் பொன்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலர் துளசிராமன், தர்மபுரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவகுமார், எழுத்தாளர் கவிஞர் மாரி கருணாநிதி, மொரப்பூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மொரப்பூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: