படிக்கவில்லை என தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி, திருமங்கை ஆய்வார் தெருவை சேர்ந்தவர் பானு (38). இவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், ஸ்ரீபெரும்புதூரில் தனது தாயார் வீட்டில் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய சிறுமி, வீட்டில் உள்ள தனது அறையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாய், ஒழுங்காக படிக்கவில்லை என்று திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகடைந்த பானு அறையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post படிக்கவில்லை என தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: