‘பசுமை கூடலூர்’ இலக்கில் மரக்கன்று நடும் விழா

கூடலூர், செப்.19: பசுமை கூடலூர் என்னும் இலக்கின் அடிப்படையில், கூடலூர் ரோட்டரி வேலி சங்கம், கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தை ஒட்டிய பிரதான சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி வேலி சங்க தலைவர் ராபர்ட், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சாஜி எம் ஜார்ஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ‘பசுமை கூடலூர்’ இலக்கில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: