சென்னை: தேனாம்பேட்டை அஞ்சலகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்ட முகாம் தேனாம்பேட்டையில் நடந்தது. சிறுசேமிப்பு திட்டத்தில் உள்ள பிரதம மந்திரியின் அட்டன் பென்சன் யோஜனா, பி.எம்.எஸ்.பி.ஒய், பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய் போன்ற பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு அஞ்சலகங்கள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களை பலனடைய செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம், சிறிய சிறிய தொகையை கணக்குகளில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.