நெல்லை, ஜூன் 24: நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை (25ம் தேதி) பிற்பகல் 4 மணிக்கு நடக்கிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
The post நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.
