காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ரஜினிக்காக விசேஷ பூஜை

சென்னை: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நடிகர் ரஜினிக்காக விசேஷ பூஜை நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 32 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளையும் நியமித்த பிறகு மாநில நிர்வாகிகள் நியமனம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு மே மாதம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

நடராஜ சாஸ்திரிகள் இந்த பூஜையை செய்தார். பின்னர் இதற்கான பிரசாதம் போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ரஜினியிடம் பிரசாதத்தை சாஸ்திரிகள் வழங்கினார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இதுவரை 25 மாவட்டங்கள் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ளது.

Related Stories: