நாகை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

 

நாகப்பட்டினம், மே 27: வீட்டிற்கு செல்லும் இடத்திற்கு பாதை கேட்டு, பாதிக்கப்ப ட்ட குடும்பத்தினர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ரோஸ்லின், அருள்மேரி, பிரிமிலா, ராபர்ட், மிஸ்டிக்கா, மிஸ்பாமேக்தலின், விமலா, உள்ளிட்ட 5 குடும்பத்தினர் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.அவர்கள் அனைவரும் திடீர் என கலெக்டர் அலுவலகம் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை வேலி வைத்து அடைத்து விட்டதால், ஐந்து குடும்பத்தினர் பாதை இல்லாமல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

The post நாகை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: