நாகை அருகே சரக்கு ரயில் மோதி முதியவர் பலி

கீழ்வேளூர், ஜூன் 18: நாகை அருகே பொரவச்சேரி ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(60). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கீழவெளி பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது, திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயில் நாகராஜன் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் ரெயிலில் அடிபட்டு இறந்த நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாகை அருகே சரக்கு ரயில் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: