தொட்டியம், ஏப்.11: திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் பங்குனி மாதம் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான 30 அடி உயரம் உள்ள இரண்டு தேர்களில் மதுரை காளியம்மன், ஓலைப்பிடாரி அம்மனும் எழுந்தருளி முக்கிய வீதி வழி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.திருத்தேர்களை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றனர்.
விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து திருத்தேர் இரண்டும் வாணபட்டரை மைதானத்தை அடைந்தது. அங்கு இரவு கண்ணை கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பண்டிகைகள் விழாக்கள் ஆகியவற்றை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக ஒலி, ஒளியும், அதிர்வேட்டு சத்தமும் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.வான வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
The post தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.