தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,700 டன் புழுங்கல் அரிசி

ஈரோடு, செப். 7: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் 2,700 டன் புழுங்கல் அரிசி பொது விநியோக திட்டத்திற்காக வந்தது. இதைத்தொடர்ந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொதுவிநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 2,700 டன் புழுங்கல் அரிசி தெலுங்கானாவில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2,700 டன் புழுங்கல் அரிசி appeared first on Dinakaran.

Related Stories: