தூத்துக்குடியில் வடிகால் பணிகள்

தூத்துக்குடி, செப். 1: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் பொன்னுசாமி, கவுன்சிலர் ஜான் என்ற சீனிவாசன், வட்ட பிரதிநிதி ஜெயமுருகன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோன்று மத்திய அரசு ஊழியர் காலனி, சிவந்தாகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

The post தூத்துக்குடியில் வடிகால் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: