தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தின் சார்பாக தஞ்சை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த 300க்கும் மேற்பட்டோர் திறண்டனர். மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் ரயிலை மறிக்கவும் அவர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.