தீப்பிடித்து 2 வீடுகள் நாசம்

வேப்பூர், ஆக. 1: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் மனைவி வைரம் (40). இதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் தற்போது குடும்பத்தோடு வேலைக்காக கேரளா சென்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் திடீரென வைரம் தனது பொருட்களை வைத்திருந்த வாடகை கூரை வீட்டில் தீப்பற்றியது இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ அருகிலிருந்த பிரேம் குமார் (45) என்பவரின் கூரை வீட்டிலும் பரவியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், தீயை அணைத்தனர். இதில் பிரேம்குமார் வீட்டில் இருந்த ஒரு சில பொருட்களும் தீயில் இருந்து சேதமடைந்தது.

The post தீப்பிடித்து 2 வீடுகள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: