ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி ஆகியோர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று 5 மாணவிகளும் பள்ளிக்கு ஒன்றாக படிப்பதற்காக சென்றுள்ளனர். வேறு வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுவதால் 9ம் வகுப்புக்கு நேற்று தேர்வோ, சிறப்பு வகுப்போ இல்லாத நிலையில் இவர்கள் 5 பேரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இதனைப்பார்த்த ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின், ஏன் தேவையில்லாமல் பள்ளிக்கு வந்துள்ளர்கள் என்று கண்டித்துள்ளார். மேலும் ஆண் நண்பர்களை பார்ப்பதற்காகவே அவர்கள் பள்ளி வந்துள்ளதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாணவிகள் அரளி விதைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக முதலுதவி அளித்து மாணவிகளை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவிகளில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: